Ref: PAR
- 2 / 4. தேதி:
10/01/2026
பொருள்:
இயற்கை வாழ்வியல் பூங்கா மற்றும் 'வீட்டுக்கொரு வைத்தியர்' திட்ட ஒருங்கிணைப்பு
குறித்த ஆலோசனை வேண்டுதல்.
அனுப்புநர்:
ஹாஜி
எஸ். முஹம்மது,
பங்களாபட்டி
சாலை, வடகரை, பெரியகுளம்.
பேசி:
9345562420
பெறுநர்:
திரு.
ஆதிவாசி முருகன்,
பாரம்பரிய
சித்த வைத்தியர் மற்றும் பாதிக்கப்பட்டோர் கழகம் - தேனி மாவட்ட பிரதிநிதி.
தேனி.
மதிப்பிற்குரிய
முருகன் அவர்களுக்கு,
வணக்கம்.
எனது 'பங்கேற்பு நடவடிக்கை ஆராய்ச்சியில்' (PAR) உங்களை இரண்டாவது 'வழிகாட்டியாக' (Guide No: 2) கருதி இக்கடிதத்தை எழுதுகிறேன்.
* எனது வாழ்வின் இறுதி இலட்சியமான 'இயற்கை
வாழ்வியல் பூங்கா' திட்டத்தைப் பெரியகுளத்திலும், பூம்பாறையிலும் தொடங்குவதற்கான
காலம் கனிந்துவிட்டது.
* முதற்கட்டப் பணிகளுக்காக ₹50,000 நிதியைத்
திரட்டியுள்ளேன். இதன் வரைவுத் திட்டத்தை இன்று எனது வலைப்பூவில் (Blog) வெளியிட்டுள்ளேன்.
* உங்களது 'ஆதி சித்தர் குருகுலம் கவுன்சில்'
முன்னெடுத்து வரும் "வீட்டுக்கொரு வைத்தியர் திட்டம்" என்னை மிகவும்
கவர்ந்துள்ளது. இது எனது இயற்கை மருத்துவப் பூங்காவின் அடிப்படை நோக்கத்தோடு நூறு
சதவீதம் ஒத்துப்போகிறது.
* எனவே, நமது இரண்டு நிறுவனங்களின்
தனித்தன்மையும் மாறாமல், அதே சமயம் பரஸ்பரம் இணைந்து செயல்படுவதற்கான
சாத்தியக்கூறுகளை ஆலோசிக்க விரும்புகிறேன்.
இது
குறித்து விரிவாகப் பேச, எனது நண்பர்களுடன் உங்களை எப்போது சந்திக்கலாம் என்பதைத்
தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
ஹாஜி
எஸ். முஹம்மது.
இணைப்பு:
இயற்கை
வாழ்வியல் பயிற்சி மைய வரைவு
(Action Plan Draft)
1.
மையத்தின் நோக்கம் (Vision & Mission):
இயற்கையோடு
இணைந்து வாழ்வதன் மூலம் முதியோர்களின் உடல், மன மற்றும் ஆன்மீக நலனை மேம்படுத்தி,
ஒரு மகிழ்ச்சியான சமுதாயத்தை உருவாக்குதல்.
2.
நிலப் பயன்பாட்டு வரைபடம் (அரை ஏக்கர் - 21,780 ச.அடி):
குறைந்தபட்ச
நிலத்தில் அதிகபட்ச பலன் தரும் வகையில் நிலம் கீழ்க்கண்டவாறு பிரிக்கப்படும்:
* கட்டிடப் பகுதி (20%): காற்றோட்டமான தங்கும்
அறைகள் மற்றும் எளிய சமையற்கூடம்.
* தோட்டப் பகுதி (40%): மூலிகைத் தோட்டம்
மற்றும் நஞ்சில்லா இயற்கை விவசாயம்.
* திறந்தவெளிப் பகுதி (30%): தியானக் கூடம்,
யோகா அரங்கு மற்றும் இயற்கை நடைபாதை.
* கட்டமைப்பு (10%): சூரிய சக்தி மற்றும்
மழைநீர் சேகரிப்பு வசதிகள்.
3.
பயிற்சி மற்றும் கால அட்டவணை:
தினசரி
அதிகாலை 5:30 மணிக்கு விழிப்பு தொடங்கி, இரவு 8:00 மணி வரை யோகா, மூச்சுப்
பயிற்சி, இயற்கை உணவு முறை மற்றும் தியானம் என உடலையும் மனதையும்
தூய்மைப்படுத்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.
4.
நிர்வாகம் மற்றும் நிதி:
ஒரு
அறக்கட்டளை (Trust)
மூலம்
நிர்வாகம் செய்யப்படும். முதலீட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் பங்களிப்புடன் (Plan 1 & 2) நிதி மேலாண்மை செய்யப்படும்.
அடுத்த
கட்ட நடவடிக்கை: தொடரும்.